×

சிசிடிவி கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை

நாகப்பட்டினம், மார்ச்8: நாகப்பட்டினம் மாவட்டத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்தாத மருந்து கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என என ஜானிடாம் வர்கீஸ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் மருந்துகள் மற்றும் அழகு சாதன பொருட்கள் சட்டம் -1940 மற்றும் -1945 ஆகியவற்றி குறிப்பிட்டுள்ள மருந்து, மாத்திரைகள் விற்பனை செய்யும் அனைத்து மருந்துகடைகளிலும் குற்றவியல் நடைமுறை சட்டம் -1973 பிரிவு 133-ன் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்றுமுன்தினம் (6ம் தேதி) இருந்து 30 நாட்களுக்குள் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டும். தவறும் பட்சத்தில் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் ஆய்வின் போது கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தபடாத மருந்தகங்களின் உரிமையாளர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

The post சிசிடிவி கேமரா பொருத்தாத மருந்தகங்கள் மீது நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Nagapattinam ,Nagapattinam district ,Janitam Vargis ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்டத்தில் குடிநீர்...